தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வரப்புயர….
வற்றாச் சுரங்கமாய்
நீர்நிலை ஊற்று
வரண்டிடும் வேளையும்
காப்பது போற்று
திரண்டிடும் வேளையும்
தேவையே காப்பு
வரம்பது மீளாது வளர்வது தோப்பு
வாட்டமே அற்று வளர்கின்ற நாற்றில்
வயிற்றுப் பசிக்கு உணவென விருந்து
உழைப்பின் விகுதியே உயர்த்தும் உராய்வில்
வரப்பென உயரும் வாழ்வின்
தகுதி
உணவாய் உழைப்பாய்
உலகிடை விருத்தி
வரப்பென வரம்பிடும் அறிதிறன் புரட்சி
அகிலத் தோப்பினை ஆளுமே ஆட்சி
ஆற்றல் வரப்பினை போற்றுதல்
உயர்ச்சி.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan