இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

மாறுகின்ற முகவரிகள்…
தொன்மை குன்றாது
தொடர்பும் விலத்தாது
பயணம் வாழ்வாகும்
பணிகள் வேறாகும்
ஆற்றல் அணிசேரும்
ஆக்கம் விளைவாகும்
உயிர்ப்பின் சுவாசத்தில்
உலகின் உராய்வுகள்
உந்து சக்தியாய்
மாற்றும் தொழில்நுட்பம்
மதியின் அறிவிலே
வேகம் சுழற்சியில்
விரையும் பெருமாற்றம்
வினைத்திறன் உந்தியாய்
அறிதிறன் விருத்தியாய்
அகிலப் புரட்சியில்
அசையுதே அனுதினம்
மாற்றத்தின் திறவுகோல்
மலைபோல் வளருது
போற்றிடும் செயல்களும்
நொடியிலே நிகழுது
வாழ்த்திடும் வாகையில்
வற்றாத வரமே
தொழில்நுட்ப அறிவியல்
துலங்கிடும் நிதமே!.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading