ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

வரமானதோ வயோதிபம்

நேவிஸ் பிலிப் (கவி 412)

மதியின் முயற்சியால் உயர்ந்தோர்
ஐக்கிய மனப் பான்மை
ஒன்று பட்ட வாழ்வு
புரிந்துணர்வு தன்மை
முனைப்பான இலட்சிய அவா

பதறாமல் காரியமாற்றி
சிதறாமல் கூட்டிச் சேர்த்து
பக்குவமாய் வாழ்ந்த வாழ்க்கை
வரமானதே

சின்னச் சின்ன கதைகள் சொல்லி
பண்பாட்டை மனதில் ஊட்டி
பாட்டியோடு தாத்தாவும் கை கோர்த்து
பிறரோடு இணைந்து வாழும் முறைகள்சொல்லி
வளர்த்த விதம் மறக்கலாமோ.?

சுருங்கிய கண்ணின் பார்வையும்
பல்லில்லா வாயின் சிரிப்பும்
பஞ்சு போல நரைத்த வெண் முடியும்
வயோதிபத்தின் அழகைக் காட்டி நிற்க
அதுவும் எமக்கு வரமானதே.

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading