மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

வரமானதோ வயோதிபம்

நேவிஸ் பிலிப் (கவி 412)

மதியின் முயற்சியால் உயர்ந்தோர்
ஐக்கிய மனப் பான்மை
ஒன்று பட்ட வாழ்வு
புரிந்துணர்வு தன்மை
முனைப்பான இலட்சிய அவா

பதறாமல் காரியமாற்றி
சிதறாமல் கூட்டிச் சேர்த்து
பக்குவமாய் வாழ்ந்த வாழ்க்கை
வரமானதே

சின்னச் சின்ன கதைகள் சொல்லி
பண்பாட்டை மனதில் ஊட்டி
பாட்டியோடு தாத்தாவும் கை கோர்த்து
பிறரோடு இணைந்து வாழும் முறைகள்சொல்லி
வளர்த்த விதம் மறக்கலாமோ.?

சுருங்கிய கண்ணின் பார்வையும்
பல்லில்லா வாயின் சிரிப்பும்
பஞ்சு போல நரைத்த வெண் முடியும்
வயோதிபத்தின் அழகைக் காட்டி நிற்க
அதுவும் எமக்கு வரமானதே.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading