ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

வரமானதோ வயோதிபம்..!

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி -2125

வரமானதோ வயோதிபம்..!!

வரமானதோ வயோதிபம் அன்றி
உரமானதோ வாழ்வில் அதிகம்
பயிரானதோ விளை நிலத்தில்
பலமானதோ பண்பாடு தழைக்க

மனை யாவிலும் ஒன்று உண்டாம்
புனை காவியம் மிகவும் நன்றாம்
அனுபவம் பகிர்வே சிறப்பாம்
மூத்தோர் வழி காட்டி வரமேயாம்

சொற்கள் ஒவ்வொரு வேதமாம்
சொந்தமே புதிய கீதையாம்
சொரிவது அன்பின் சுகந்தமாம்
வரி வரி முதுமையின் கோலமாம்

வருவது இயற்கை தரு பரிசாம்
வந்த பின் ஓடுவது பயனற்றதாம்
படைப்பின் வினையே உணர்வதாம்
தடையென்ன வயோதியம் இயல்பாம்

முடங்கிட வைத்திட வேண்டாமே
முனைப்பது உயர்த்திட வேண்டுமே
இன்று அவருக்கு நாளை நமக்கு
இதுவே ஏற்பது வரமென ஆவதாம்..
சிவதர்சனி இராகவன்
20/3/2025

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading