மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

வரமானதோ வயோதிபம்..!

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி -2125

வரமானதோ வயோதிபம்..!!

வரமானதோ வயோதிபம் அன்றி
உரமானதோ வாழ்வில் அதிகம்
பயிரானதோ விளை நிலத்தில்
பலமானதோ பண்பாடு தழைக்க

மனை யாவிலும் ஒன்று உண்டாம்
புனை காவியம் மிகவும் நன்றாம்
அனுபவம் பகிர்வே சிறப்பாம்
மூத்தோர் வழி காட்டி வரமேயாம்

சொற்கள் ஒவ்வொரு வேதமாம்
சொந்தமே புதிய கீதையாம்
சொரிவது அன்பின் சுகந்தமாம்
வரி வரி முதுமையின் கோலமாம்

வருவது இயற்கை தரு பரிசாம்
வந்த பின் ஓடுவது பயனற்றதாம்
படைப்பின் வினையே உணர்வதாம்
தடையென்ன வயோதியம் இயல்பாம்

முடங்கிட வைத்திட வேண்டாமே
முனைப்பது உயர்த்திட வேண்டுமே
இன்று அவருக்கு நாளை நமக்கு
இதுவே ஏற்பது வரமென ஆவதாம்..
சிவதர்சனி இராகவன்
20/3/2025

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading