வரமானதோ வயோதிபம்..!

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி -2125

வரமானதோ வயோதிபம்..!!

வரமானதோ வயோதிபம் அன்றி
உரமானதோ வாழ்வில் அதிகம்
பயிரானதோ விளை நிலத்தில்
பலமானதோ பண்பாடு தழைக்க

மனை யாவிலும் ஒன்று உண்டாம்
புனை காவியம் மிகவும் நன்றாம்
அனுபவம் பகிர்வே சிறப்பாம்
மூத்தோர் வழி காட்டி வரமேயாம்

சொற்கள் ஒவ்வொரு வேதமாம்
சொந்தமே புதிய கீதையாம்
சொரிவது அன்பின் சுகந்தமாம்
வரி வரி முதுமையின் கோலமாம்

வருவது இயற்கை தரு பரிசாம்
வந்த பின் ஓடுவது பயனற்றதாம்
படைப்பின் வினையே உணர்வதாம்
தடையென்ன வயோதியம் இயல்பாம்

முடங்கிட வைத்திட வேண்டாமே
முனைப்பது உயர்த்திட வேண்டுமே
இன்று அவருக்கு நாளை நமக்கு
இதுவே ஏற்பது வரமென ஆவதாம்..
சிவதர்சனி இராகவன்
20/3/2025

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading