அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

வரமானதோ வயோதிபம்..!

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி -2125

வரமானதோ வயோதிபம்..!!

வரமானதோ வயோதிபம் அன்றி
உரமானதோ வாழ்வில் அதிகம்
பயிரானதோ விளை நிலத்தில்
பலமானதோ பண்பாடு தழைக்க

மனை யாவிலும் ஒன்று உண்டாம்
புனை காவியம் மிகவும் நன்றாம்
அனுபவம் பகிர்வே சிறப்பாம்
மூத்தோர் வழி காட்டி வரமேயாம்

சொற்கள் ஒவ்வொரு வேதமாம்
சொந்தமே புதிய கீதையாம்
சொரிவது அன்பின் சுகந்தமாம்
வரி வரி முதுமையின் கோலமாம்

வருவது இயற்கை தரு பரிசாம்
வந்த பின் ஓடுவது பயனற்றதாம்
படைப்பின் வினையே உணர்வதாம்
தடையென்ன வயோதியம் இயல்பாம்

முடங்கிட வைத்திட வேண்டாமே
முனைப்பது உயர்த்திட வேண்டுமே
இன்று அவருக்கு நாளை நமக்கு
இதுவே ஏற்பது வரமென ஆவதாம்..
சிவதர்சனி இராகவன்
20/3/2025

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 24-06-2025 வண்ணப் பெண்ணவளாய் வாஞ்சையோடு உலாவருவாள் குடும்பமென அர்ப்பணித்து குலவிளக்காய் சுடர்விட்டாள் வாழ்நாள் முழுதும் உழைத்து வானம்...

Continue reading