” வரமானதோ வயோதிபம் “

ரஜனி அன்ரன் (B.A) “வரமானதோ வயோதிபம் “ 20.03.2025

வாழ்க்கைப் பயணமதில்
வயோதிபம் காலத்தின் கட்டாயம்
அந்திம காலத்து அத்தியாயம்
அன்பிற்காய் ஏங்கும் இதயம்
வாழ்ந்த வாழ்வின் அடையாளம்
வதனப் பொலிவின் வரிக்கோலம்
வரமானதோ வாழ்வின் இறுதியில் வயோதிபமாக !

வெண்கம்பிக் கேசம் கதை சொல்ல
விழிமடல்களில் குழியும் விழ
கால் போகும் திசையில் நடந்து
கால்கள் மூன்றாகி நடக்கையில்
மனம் மட்டும் மரம்விட்டு மரம்தாவ
வாழ்ந்த காலங்களின் இரைமீட்புக்காலம்
வரமானதோ வயோதிபக் காலமதில் !

இளமைக்கால நினைவுகள் அலைமோத
இறுமாப்புக்களும் வந்து நினைவூட்ட
வாழ்ந்த வாழ்வு காட்சியாக
வாரிசுகளும் வம்சத்தின் சாட்சியாக
பேரன் பேத்தியரும் மாட்சிமையாக
வரமானதே வாழ்வினை நிறைவாக்க வயோதிபமும் !

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading