” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வரமென வந்தனள்

இரா.விஜயகௌரி
மீண்டும் பிறந்தது போல் பேருவகை
மிடுக்காய் பேசியெழும் மணித்துளிகள்
சேயாய் மாறியிழை சிறு பருவம்
செல்லச் சிணுங்கலுள்ளே பல கதைகள்

விழிகள் பேசும்மொழி வியந்தெழுத
விளையாடும் கை கால்கள் ஜதி இழைய
குமிண் சிரிப்பில் கொள்ளையிடும் பேரழகி
இவள் குல விளக்காம் நம் அகத்து ஒளிச்சுடரே

ஆறே வாரங்கள் ஆகி விட்ட பருவம்
அழகாய முகம் பார்த்து புன்னகைக்கும் அதரம்
பேச எடுக்கும் தொனி பேசாமல் அகம் பேச
அதிசயங்கள் பல எழுதும்அற்புத்த்து குழவி இவள்

சேயாய் ரசித்ததில்லை அவசரத்தில் வாழ்க்கை
பாட்டி கொஞ்சி மகிழ் பரவசத்தில் ஊற்று
கையுள் கரைந்திழையும்கனிரசமாம் சேவை
கட்டி முத்தமிட்டு வரமென்போம்

Author: