வலியதோ முதுமை

இ.உருத்திரேஸ்வரன்

பிறந்தவர்க்கு உண்டே முதுமை தரணியில்
காபனுக்கு முதுமை வந்தால் வைரம்
மரத்துக்கு முதுமை வந்தால் விறகு
மனிதனுக்கு முதுமை வந்தால் பொல்லு

தொள தொள என வரும் உடம்பு
தொங்கும் தோலும் எங்கும் வலியே
தொல்லை கொடுக்கும் இருமல்
தொந்தரவு என நினைக்கும் உறவு

நடந்து திரிந்தால் இனிமை முதுமை
படுக்கையில் விழுந்தால் வலியது முதுமை
உதவிக்கு ஆட்களை தேடுது
உறங்கவே கண்கள் தவிக்குது

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan