பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

வலியதோ முதுமை..

வியாழன் கவி 1954…!

வலியதோ முதுமை..!

வலியதோ முதுமை
அன்றில் மெலியதோ தனிமை
இமயமாய் வாழ்ந்த இதயங்கள்
இன்றோ இயல்பிழந்த இயக்கங்கள்
விதியென நோகிறார் வீதியில்
கடனென வாழ்கிறார்…!

ஆளுமையோடு பயணித்த இவர்
அந்தோ வயோதிபம் மடியில்
உணராத மக்களோ மெல்ல
உதறியே செல்கிறார்
சாறு பிழிந்த கரும்புச் சக்கை
குப்பையில் வீசுதல் போல்
பயன் பெற்ற பின்னர் பாதகம்
செய்திடல் தகுமோ பாரீர்…।

வலியதோ முதுமை அன்றி
வழி யறியாததோ இன் நிலை
மாற்றத்தைக் காணுவீர் அன்றி
மாறும் உம் நிலை நாளை
பொக்கிசங்கள் போலும்
காத்திடும் அதுவே கடமை…
சிவதர்சனி இராகவன்
28/3/2024

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading