வலியதோ முதுமை..

வியாழன் கவி 1954…!

வலியதோ முதுமை..!

வலியதோ முதுமை
அன்றில் மெலியதோ தனிமை
இமயமாய் வாழ்ந்த இதயங்கள்
இன்றோ இயல்பிழந்த இயக்கங்கள்
விதியென நோகிறார் வீதியில்
கடனென வாழ்கிறார்…!

ஆளுமையோடு பயணித்த இவர்
அந்தோ வயோதிபம் மடியில்
உணராத மக்களோ மெல்ல
உதறியே செல்கிறார்
சாறு பிழிந்த கரும்புச் சக்கை
குப்பையில் வீசுதல் போல்
பயன் பெற்ற பின்னர் பாதகம்
செய்திடல் தகுமோ பாரீர்…।

வலியதோ முதுமை அன்றி
வழி யறியாததோ இன் நிலை
மாற்றத்தைக் காணுவீர் அன்றி
மாறும் உம் நிலை நாளை
பொக்கிசங்கள் போலும்
காத்திடும் அதுவே கடமை…
சிவதர்சனி இராகவன்
28/3/2024

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading