வாணியின் வளவு 84

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-09-2025

மூவுலகைக் காக்கும் தேவியரே
மூவரின் அருளும் தேவையே எமக்கு கையில் சூலமேந்தி, கண்ணில் கருணையைச் சுமந்தவளே துர்க்கை

உழைக்கும் கரத்தில் ஊக்கமாய் லட்சுமியும்
வளரும் பயிராகி
வளம் பெருக்குவாய் நீயே

வாணியின் வளவில் நுழைந்த மனம்
வாழ்வின் தத்துவம் பேசுகிறது
அமைதி வாசம் வீசுகிறது
ஞான ஒளி தெரிகிறது

கல்வி கலைகளை யோசிக்கிறது
மாலை நேரம் கூடுகிறது
கலந்து மனமும் சிந்திக்கிறது
கதை,கவிதை கோலமிடுகிறது

வாணியின் வளவு அமைதியாய்
வனாந்தரமற்று செழிக்கிறது.
கலைக்கு அரசியாய் நீவிர்
கவி புனைய வைத்தாயே தாயே

Jeba Sri
Author: Jeba Sri

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading