ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

வாணியின் வளவு 84

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-09-2025

மூவுலகைக் காக்கும் தேவியரே
மூவரின் அருளும் தேவையே எமக்கு கையில் சூலமேந்தி, கண்ணில் கருணையைச் சுமந்தவளே துர்க்கை

உழைக்கும் கரத்தில் ஊக்கமாய் லட்சுமியும்
வளரும் பயிராகி
வளம் பெருக்குவாய் நீயே

வாணியின் வளவில் நுழைந்த மனம்
வாழ்வின் தத்துவம் பேசுகிறது
அமைதி வாசம் வீசுகிறது
ஞான ஒளி தெரிகிறது

கல்வி கலைகளை யோசிக்கிறது
மாலை நேரம் கூடுகிறது
கலந்து மனமும் சிந்திக்கிறது
கதை,கவிதை கோலமிடுகிறது

வாணியின் வளவு அமைதியாய்
வனாந்தரமற்று செழிக்கிறது.
கலைக்கு அரசியாய் நீவிர்
கவி புனைய வைத்தாயே தாயே

Jeba Sri
Author: Jeba Sri

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading