விஜயகுமார் ஜதுர்ஷிகா.

வரப்புயர

காடு வெட்டி
நிலம் உழுது
கழனி செய்ய
கலப்பையுடன் சென்றோமே.

விதை தூவி
நாம் செல்ல
சிறு முளை ஒன்று
மண்ணில் தோன்றியது.

வளர்ந்து வரும்
பயிருக்காக,
நீர் பாய்ச்ச வேண்டுமென
கட்டினோமே வரம்பு உயர

வரம்பு வழியே
நீர் சென்று
நெல்லின் வேரை
தொட்டு விட

அருவடைக்காய் முற்றிய
பருவம் கிட்டியதே
கிட்டியதும் வெட்டி அதை
எடுத்தோமே உணவிற்காய்

பசி எல்லாம்
நீங்கி விட
எம் மனதில்
இன்பம் இங்கே

பசிக்கு மருந்தாக
விவசாயம் மாறி விட
இதை வைத்து
வறுமை ஒழிக்க
நாமே வழி கண்டோமே
எம் வாழ்வில்.

*******
விஜயகுமார் ஜதுர்ஷிகா.
முல்லைத்தீவு உடுப்புக்குளம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading