மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

விடுமுறைக்காலம்

சிவதர்சனி

வியாழன் கவி 2001…

விடுமுறைக் காலம்..

எறும்பாட்டம் உழைத்த மனங்கள்
ஓய்வு கேட்கும் கோடை காலம்
ஊரைச் சுற்றும் வாலிபராட்டம்
பெரிசுகள் கூட உலாக்கோலம்..

நாடு விட்டு நாடேகுதல் சிலரும்
நாட்டுக்குள்ளே விடுமுறை விருப்பும்
அடுக்குப் பண்ணுதல் இளையோருமே
அழகான பயணம் கோடை தன்னிலே..

மழை வந்தும் மந்த கால நிலையும்
மெல்ல விருப்பினை மறைக்க
கோடையில் ஓர் மார்கழியாம்
இது புதுசா இருக்கே பாரீர்..

உறவினரைக் கண்டு உவகை பூண்டு
நிறைவாய்த் தாமே பேசிக் களிக்க
ஊரின் புதினம் உறவின் நெருக்கம்
யாவும் கலக்கும் இக்காலம் தன்னில்
சிவதர்சனி இராகவன்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading