விண்ணிலிருந்து ஓர் விடியல்-2131 ஜெயா நடேசன்

விண்ணிலிருந்து ஓர் அற்புத விடியல்
மண்ணை முத்தமிட பாடி மகிழ்ந்திட
எம்மை தேடி வருகின்றது
பொய்மையிலிருந்து உண்மைக்கும்
இருளிலிருந்து ஒளி நிலையில்
அழிவிலிருந்த மீட்டெடுக்க
அற்புதமாக வால் வெள்ளியானது
அன்னை மரியா உதரத்தில்
அற்புத மகனாய் மலர்ந்ததே
மங்காத ஒளி மக்கள் மழையாய்
அருட்கொடைகளை அள்ளி தர
வானவர் கீதம் பாட மானிடரை தேடி
ஒளியாக நல்வழியாக பல வழியாக
அன்பாக அருளாக கொடையாக
துயர் துடைத்து விடியல் தந்திட
விண்ணிலிருந்து தேடி வருகிறது

Author:

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading