வேண்டாத போரும் தீண்டாத பழியும்

நகுலா சிவநாதன்
வேண்டாத போரும் தீண்டாத பழியும்

வளைகுடா யுத்தம் வாட்டுது மக்களை
தலையெடுத்து வாழத் தடையாக இருக்குதே!
நீநான் போட்டி நிலைக்குமா? என்றும்
நீதியும் இன்றி நேர்மையுமின்றி
நிர்மூலமாகும் நகர அழிவுகள்.

வேண்டாத போரும் தீண்டாத பழியும்
பூண்டிருக்கும் வேடம் புதுப்புது அர்த்தம்
வாழக் காத்திருக்கும் மக்கள் விழிகள்
சோர்ந்திருக்கும் நிலையை யார்தான் எண்ணுவார்?

அதிருது கட்டிடம் அடைமழையாய் குண்டுகள்
பதியும் தரைமட்டம் பலரும் அவலக்குரல்
புதிரும் போட்டு ஆட்டமும் தொடருது
வதியும் இடங்கள் வரலாறாய் பதியுது

எரிபொருளும் எண்ணெயும் அழியுது அங்கு
ஏமாற்றம் பலருக்கு வாழ்வே போராட்டம்
பயணங்கள் தடையாகுது பயணிகள் ஏமாற்றம்
நனிசேர் வாழ்வின்று குற்றுயிராய்த் போகுது!

நகுலா சிவநாதன் 1847

Author:

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading