மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

வே.இராசலிங்கம்

மார்கழிநீர் ஆகலொடும் மன்பதைகள் தேடுமிறை
மனத்திருத்தி வணங்கவேண்டும்
வயல்மருங்கிற் கனலியவன் வந்துஒளி தருகின்ற
வைகறையும் இணங்கவேண்டும்
சீர்மலியத் தமிழவளின் சிந்தொடுதேன் காணுகின்ற
தென்றலிசை அணங்குவேண்டும்
தேவாதி தேவரெலாம் திருக்கயிலை மலையேறித்
துதித்தகவிப் பணியவேண்டும்
வேர்மலியத் திருவாரும் வேதமறை ஒலிக்கின்ற
வித்தகப்பொன் எழில்வேண்டும்
வீராதி வீரலொம் மானசரோவர் நன்நீரில்
மிதக்கின்ற பொழில்வேண்டும்
கார்மலியப் பெரும்மழையில் கனத்தபயிர் மண்ணினொடும்
கதிர்கொடுத்து மலரவேண்டும்
கம்பனுயர் தமிழ்பரப்பிக் கட்டுண்ட செந்தமிழில்
காவியத்தேன் இலங்கவேண்டும் !

தண்தமிழில் விண்கதவு தட்டியே திறக்கின்ற
தனிநாடு ஒன்றுவேண்டும்
சாராக மலைவெள்ளம் சரிந்தோட வைக்கின்ற
சந்நிதியார் மன்றுவேண்டும்
விண்தொட நிவர்ந்தமேனி விறல்வேந்தன் விநாயகன்சீர்
வேதநெறி தழைக்கவேண்டும்
விட்டிலெனப் போகாமல் தொட்டிலெனத் தாலாட்டும்
மௌவலொடும் அழைப்புவேண்டும்
கண்பனித்த அருள்மலரும் கண்மணியாள் நெறிஒளிரக்
கனகமண்ணின் சிறைவேண்டும்
காற்றினொடும் சம்பங்கி கண்டுநடம் பயிலுகின்;ற
கனமதுரைத் திறைவேண்டும்
பண்ணார்ந்த தேவியவள் பதஞ்சலிஐம் பூதமொடும்
பாடுமழைச் சரம்வேண்டும்
பாங்கெனவே உழைப்பிலிடும் பரந்தமார் கழியோடும்
பற்றும்நீர் வரம்வேண்டுமே !

வே.இராசலிங்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading