ஷர்ளா தரன்

அழியாத கோலங்கள்

அன்ணை மடியில் தவழ்ந்ததும்
அணைத்து அவள் ஊட்டியதும்
அப்பா அள்ளித் தழுவியதும்
ஆரவாரமாய் பள்ளி சென்றதும்
அயலவரோடு கூடி மகிழ்ந்ததும்
சொந்தங்கள் நிறைந்து இருந்த வீடும்
சொர்க்கம் போல் வாழ்ந்த வாழ்வும்
உயர் கல்வியும் ஊர் வம்பும்
உற்ற நண்பர்களோடு சேட்டையும்
அழியாத கோலமாய்
அகண்டு நிற்குது என் மனதில்

நெஞ்சினிக்க பேசிய வார்த்தை
நேசம் கொண்டு வாழும் வாழ்க்கை
கொஞ்சி உலாவிய வேளையில்
கெஞ்சி வரும் சின்னச் சண்டைகள்
மஞ்சி விரட்டுப்போல்-அவளை
மடக்கிப் பிடித்த நினைவுகள்
மனதில் நின்று
மங்கிடாது துளிரூட்டும்
மங்கை அவள் நினைவுகள்
அழியாத கோலமாய்
ஆண்டுகள் பல கடந்தாலும்
மெல்லினமாய் மனதுக்குள்

சோகங்கள் பல கண்டாலும்
பாகங்கள் பல வந்தாலும்
வண்ண மலராய் வாசம் தரும்
இந்த அழியாத கோலங்கள்

ஷர்ளா தரன்

Nada Mohan
Author: Nada Mohan