தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

வியாழன் கவிதை நேரம்!! கவிதை-2311 தண்ணீருக்காய்த் திரளும் போர் மேகங்கள்..!! ஆழக்கடலைக் கடக்கின்ற அத்தனை கப்பல்களும் அள்ளிக் கொணரும் நமக்காய் அத்தியாவசியப் பொருட்களை.. அந்தோ...

Continue reading

தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள்

ராணி சம்பந்தர் மண்ணிற்கும் விண்ணுக்குமே மழை நீரில் ஏணிகட்டி குதூகல கொண்டாடத் தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள் தாகம் சுழலும்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள்..

வசந்தா ஜெகதீசன் தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள்... வரட்சி நிலைபோக்கிடுமே வளமது திரண்டிடுமே கார்மேகக் கறுக்கலிலே கனமழை பெய்திடுமே காரியத்தின் சித்திகளும் கைகூடும்...

Continue reading

14.11.24 ஆக்கம் 337 ஒளியிலே தெரிவது

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

14.11.24
ஆக்கம் 337
ஒளியிலே தெரிவது

ஒளியிலே தெரிவது
ஓங்கார வடிவம் புரியுது
தன் கட்சி வலுச் சேர்க்க
தமிழன் இழந்தது தாறன் தாறன் என்று
பின்னால் ஓடி வடம்
பிடிக்குது பிடிக்குது

புதுப் பாணியில் உயர்
பாதுகாப்பு வலயமோ
இடம்மாறித் திரியுது

மண்ணில் வேரூன்றி
வளர்ந்த மரங் கண்டு
விளையாடிய முற்றம்
வாழ்ந்த வீடு தேடிக்
கால்கள் விரையுது

நாளைய தேர்தல்
நாட்டு நடப்பில்
வேட்டு விட்டுத்
துட்டு கரையுது

சிதறிய தமிழரசுக் கட்சி
பதறிப் போய் பலவீனம்
ஆகுது
உதறி வரும் ஒளியிலே தெரிவது மெல்ல மெல்ல வந்து மனம் நிறையும் மாற்றம்
ஒன்று குதறி வரும்
தேர்தலில் வருகுது
என்று வருகுது இன்று.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading