இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 06-01-2022
ஆக்கம் – 28
மாற்றத்தின் திறவுகோல்

தலைகீழ் மாற்றத்திற்காய்
தவம் கிடக்கின்றது பிரபஞ்சம்
மெஞ்ஞானமும் விஞ்ஞானமும்
விடைகாண முடியாத சூட்சுமத்திற்குள்
உலகம் சுற்றிச் சுழல்கின்றது

கொரொணாவின் கண்ணாம்பூச்சி ஆட்டத்தில்
ஆட்டம் காண்கின்றது உலகம்
விதியா இல்லை சதியா
கேள்விகள் ஆயிரம்
பதில்களோ சூனியம்

பல்லுயிர்கள் வாழும் இவ்வுலகில்
மனிதன் மட்டுமே பேராசை கொண்டான்
வழங்களை விழுங்கும் பேயானான்
சுயத்தை இழந்து வாழ்கின்றான்
வழத்தை இழந்து தவிக்கின்றது பூமி

பொறுமையின் வளிம்பில் பூமித்தாய்
இயற்கையின் கையில் மாற்றத்தின் திறவுகோல்
மாற்றத்தின் கதவுகள் திறக்கின்ற காலம் வரும்
மனிதகுலம் மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொள்ளும் நேரம் வரும்

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading