நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ பன்னாட்டு இனவழிப்புநாள் தை27 “கவி……ரஜனி அன்ரன்(B.A) 27.01.2022

தைத்திங்கள் இருபத்தி ஏழினை
பன்னாட்டு இனவழிப்புத் தினமாக
பல்லுலகும் அறியும் வண்ணம்
பிரகடனமாக்கியதே ஐ.நா.மன்றும்
உலக வரலாற்று ஏடுகளின்
கறைபடிந்த அத்தியாயமாக
கண்ணீரின் காவியமாக
இனஅழிப்புக்கள் அரங்கேறியதே !

ஐரோப்பா தொட்டு அமெரிக்கா வரை சென்று
அவுஸ்ரேலியா கனடாவிலும் பரந்து
எங்கள் தேசமும் இதற்கு விதிவிலக்கல்லவே
இனத்தின் பேராலும் நிறத்தின் பேராலும்
உலகையும் உலுக்கியதே இனவழிப்புக்கள் !

கனடாவில் பூர்வீகக்குடிகளும்
அமெரிக்காவில் செவ்விந்தியர்களும்
அவுஸ்ரேலியாவில் பழங்குடியினரும்
மெக்சிக்கோவில் மாயன் இனத்தவரும்
ஜேர்மனியில் யூதர்களும் திட்டமிட்டே அழிக்கப்பட்டனரே
எம் தேசத்தின் நேச உறவுகளின் இனவழிப்பும்
குருதியால் எழுதப்பட்ட வரலாற்றுக் காவியங்களே
சர்வதேசம் மெளனித்திருக்க சர்வநாசமும் அரங்கேறியதே !

Nada Mohan
Author: Nada Mohan