சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ பன்னாட்டு இனவழிப்புநாள் தை27 “கவி……ரஜனி அன்ரன்(B.A) 27.01.2022

தைத்திங்கள் இருபத்தி ஏழினை
பன்னாட்டு இனவழிப்புத் தினமாக
பல்லுலகும் அறியும் வண்ணம்
பிரகடனமாக்கியதே ஐ.நா.மன்றும்
உலக வரலாற்று ஏடுகளின்
கறைபடிந்த அத்தியாயமாக
கண்ணீரின் காவியமாக
இனஅழிப்புக்கள் அரங்கேறியதே !

ஐரோப்பா தொட்டு அமெரிக்கா வரை சென்று
அவுஸ்ரேலியா கனடாவிலும் பரந்து
எங்கள் தேசமும் இதற்கு விதிவிலக்கல்லவே
இனத்தின் பேராலும் நிறத்தின் பேராலும்
உலகையும் உலுக்கியதே இனவழிப்புக்கள் !

கனடாவில் பூர்வீகக்குடிகளும்
அமெரிக்காவில் செவ்விந்தியர்களும்
அவுஸ்ரேலியாவில் பழங்குடியினரும்
மெக்சிக்கோவில் மாயன் இனத்தவரும்
ஜேர்மனியில் யூதர்களும் திட்டமிட்டே அழிக்கப்பட்டனரே
எம் தேசத்தின் நேச உறவுகளின் இனவழிப்பும்
குருதியால் எழுதப்பட்ட வரலாற்றுக் காவியங்களே
சர்வதேசம் மெளனித்திருக்க சர்வநாசமும் அரங்கேறியதே !

Nada Mohan
Author: Nada Mohan