தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

வியாழன் கவிதை நேரம்!! கவிதை-2311 தண்ணீருக்காய்த் திரளும் போர் மேகங்கள்..!! ஆழக்கடலைக் கடக்கின்ற அத்தனை கப்பல்களும் அள்ளிக் கொணரும் நமக்காய் அத்தியாவசியப் பொருட்களை.. அந்தோ...

Continue reading

தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள்

ராணி சம்பந்தர் மண்ணிற்கும் விண்ணுக்குமே மழை நீரில் ஏணிகட்டி குதூகல கொண்டாடத் தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள் தாகம் சுழலும்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள்..

வசந்தா ஜெகதீசன் தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள்... வரட்சி நிலைபோக்கிடுமே வளமது திரண்டிடுமே கார்மேகக் கறுக்கலிலே கனமழை பெய்திடுமே காரியத்தின் சித்திகளும் கைகூடும்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

இது தான் இன்றைய வாழ்வா

பண்பாடு காக்க
பந்தங்கள் கூடும்.
சொந்தங்கள் தேடும்
சொத்துக்கள் சேரும்.
மந்தமான வாழ்வில்
மகிழ்வு தொலைந்தது.
விந்தையான மனிதர்
விலங்கை மாட்டுகிறார்.
சந்தமான தமிழர்
சதங்கை கட்டுகிறார்.
முன்றலிலே ஆடுவதற்கு
மூக்கனாங் கயிறுகட்டி
பிந் நிற்போர் இழுக்க
பின்னால் நின்றியக்கம்
எந்தோர் காத்த பெருமை
எல்லாமே தொலைத்தாயிற்று.
சந்தையிலோர் பலி ஆடாக
சந்திவிலை பேசுகிறார்.
மக்களை மக்கள்
விற்கும் தோரணை.
மாந்தரே வியக்கும் வண்ணம்
எல்லாமே விட்டுப்போச்சு
ஏழைமனம் வில்லாச்சு,
ஏங்கும் உள்ளம் பெரிதாச்சு,
மும்மாரி பெய்தது போல்
மூத்தகுடியினர் வாழ்ந்த வாழ்வு
சந்தமாகிய கூட்டிலிருந்து
சொந்தம் எல்லாம் விலகி
இடைவெளிகள் கூடுகின்றது
இது தான் இன்றைய வாழ்வு.

கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading