நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ தமிழிசை “….கவி……ரஜனி அன்ரன் (B.A) 24.02.2022

இசை ஒருகலை இசைய வைப்பது இசை
இசைத்தமிழாய் வாசம் செய்யுது தமிழிசை
நோய்க்கு மருந்தாக நொந்த உள்ளங்களுக்குத் தெம்பாக
மனதிற்கு மகிழ்வாக மங்கலத்திற்கு துணையாக
மதுரத் தமிழுக்கு மகுடம் சூட்டியது தமிழிசை !

உலக மொழிகளை இசை வாசம்செய்தாலும்
இசைத்தமிழாக இசைந்து நின்று
தமிழை இசைக்கிறது தமிழிசை
தமிழரின் பாரம்பரிய இசை தமிழிசை
தமிழிசைக்கு இலக்கணம் வகுத்தது அகத்தியம்
தமிழிசையைப் பட்டை தீட்டியது பரிபாடல் !

செம்மொழிக்கு செழுமை சேர்த்தது ஏழிசை
பரமனைப் புகழ்ந்து பாட பண்ணிசை
பண்ணுக்கு இனிமை சேர்க்க இன்னிசை
பாவினத்தை வனப்பூட்ட தாழிசை
பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பது தமிழிசை !

தாலாட்டோடு தொடங்கும் மனிதவாழ்வு
சீராட்டுக்களோடு இசையோடு இசைந்து
மிடுக்கோடு பாசுரங்களில் பண்ணாகி
பரிமாணத்தோடு இசையாய் பாடலாய் கூத்தாய் பயணித்து
இறுதி நீராட்டு இசையோடு முழுமை பெறுகிறதே மனிதவாழ்வு !

Nada Mohan
Author: Nada Mohan