கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ தமிழிசை “….கவி……ரஜனி அன்ரன் (B.A) 24.02.2022

இசை ஒருகலை இசைய வைப்பது இசை
இசைத்தமிழாய் வாசம் செய்யுது தமிழிசை
நோய்க்கு மருந்தாக நொந்த உள்ளங்களுக்குத் தெம்பாக
மனதிற்கு மகிழ்வாக மங்கலத்திற்கு துணையாக
மதுரத் தமிழுக்கு மகுடம் சூட்டியது தமிழிசை !

உலக மொழிகளை இசை வாசம்செய்தாலும்
இசைத்தமிழாக இசைந்து நின்று
தமிழை இசைக்கிறது தமிழிசை
தமிழரின் பாரம்பரிய இசை தமிழிசை
தமிழிசைக்கு இலக்கணம் வகுத்தது அகத்தியம்
தமிழிசையைப் பட்டை தீட்டியது பரிபாடல் !

செம்மொழிக்கு செழுமை சேர்த்தது ஏழிசை
பரமனைப் புகழ்ந்து பாட பண்ணிசை
பண்ணுக்கு இனிமை சேர்க்க இன்னிசை
பாவினத்தை வனப்பூட்ட தாழிசை
பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பது தமிழிசை !

தாலாட்டோடு தொடங்கும் மனிதவாழ்வு
சீராட்டுக்களோடு இசையோடு இசைந்து
மிடுக்கோடு பாசுரங்களில் பண்ணாகி
பரிமாணத்தோடு இசையாய் பாடலாய் கூத்தாய் பயணித்து
இறுதி நீராட்டு இசையோடு முழுமை பெறுகிறதே மனிதவாழ்வு !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading