மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

ஒளவை

வராமல் வந்த நாயகன்
≠====≠=====≠====≠====≠
மாலை நேரம்
மங்கும் ஒளியில்
சாலை ஓரம்
சாடை பேசிட
வேளை மறந்து
வெட்கம் இன்றிக்
காளை உன்னைக்
காணத் துடிப்பேன்

முரட்டுப் பார்வை
மனதைத் தைக்க
மிரட்டிப் போவாய்
மீண்டும் மீண்டும்
வரட்டுக் கெளரவம்
விட்டுத் தள்ளி
விரட்டி விரட்டி
வருவேன் பின்னால்

நாளும் பொழுதும்
நாயாய் உன்னை
நீளும் கனவுடன்
நித்தமும் தொடர்ந்து
ஏழு சென்மமும்
என்னவன் என்று
வாழும் வாழ்வை
வரமாய்க் கண்டேன்

மனதில் உன்னை
முழுதாய் நிறைக்கச்
சினந்து ஒதுக்கிச்
சீற்றம் கொள்வாய்
கனவில் மட்டும்
கைக்குள் வந்து
தினமும் உருகிக்
காதல் செய்வாய்.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading