நன்றியாய் என்றுமே!

நகுலா சிவநாதன் நன்றியாய் என்றுமே! பெரும் செல்வம் கல்விதனை பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம் அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை அன்போடு...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நகுலா சிவநாதன்

விடியலின் உன்னதம்

விடியலின் அழகும் விந்தையின் ஒளியும்
கடிதென வந்து காலையைக் காட்டுது
படியதன் அருகே பனித்துளி விழுந்து
பன்நிற ஒளிதனை காட்டியே மின்னுது

உன்னத விடியல் உலகிற்கு அழகே
சென்னிற வானம் சேதிகள் சொல்லி
பன்னிறப் பூக்களை பாரிலே விரிக்குதே
கண்ணது காட்டி காலையின் காசினி உரைக்குதே

இயற்கையின் விந்தை இதயத்தை தொட
இங்கித பொழுது சங்கீதம் பாட
புதுமையின் புளகாங்கிதம் பூத்திடும் பாக்களாய்
வெறுமைகள் அகற்றி பார்க்குது மனசும்

காலத்தின் விடியல் ஞாலத்தில் ஒளிபெற
வாழ்க்கையின் விடியல் வரலாறாய் பதிய
புதியன விடிவும் புத்தொளி மலர்வும்
கடிதென வந்து காலத்தை உரைத்தே நிற்கும்

நகுலா சிவநாதன்1654

Nada Mohan
Author: Nada Mohan