சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

நகுலா சிவநாதன்

விடியலின் உன்னதம்

விடியலின் அழகும் விந்தையின் ஒளியும்
கடிதென வந்து காலையைக் காட்டுது
படியதன் அருகே பனித்துளி விழுந்து
பன்நிற ஒளிதனை காட்டியே மின்னுது

உன்னத விடியல் உலகிற்கு அழகே
சென்னிற வானம் சேதிகள் சொல்லி
பன்னிறப் பூக்களை பாரிலே விரிக்குதே
கண்ணது காட்டி காலையின் காசினி உரைக்குதே

இயற்கையின் விந்தை இதயத்தை தொட
இங்கித பொழுது சங்கீதம் பாட
புதுமையின் புளகாங்கிதம் பூத்திடும் பாக்களாய்
வெறுமைகள் அகற்றி பார்க்குது மனசும்

காலத்தின் விடியல் ஞாலத்தில் ஒளிபெற
வாழ்க்கையின் விடியல் வரலாறாய் பதிய
புதியன விடிவும் புத்தொளி மலர்வும்
கடிதென வந்து காலத்தை உரைத்தே நிற்கும்

நகுலா சிவநாதன்1654

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading