” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கமலா ஜெயபாலன்

களையெடுக்கும் கன்னிப்பெண்ணே
—————————-
களை யெடுக்கும் கன்னிப் பெண்ணே/
கண்ணே உன்னக் கண்ட தனால்/
வயல்காட்டு வரம்பினிலே
வந்துநானும் சுத்துறேன்டி/
பயலைப் பிடிச்சிருக்கா
பயப்படாமல் சொல்லேண்டி/

கண்ணழகு மூக்கழகு கண்மணியே உன்னழகு/
கண்மூட முடியாமல்
கலக்கி அடிக்குதடி/
பொன்னான உன்பாதம்
மண்ணான சேற்றிலே/
மடங்கிப் போகாமல்
மாமன் தாங்குவேண்டி/

கன்னக் குழியழகும் கருங்கூந்தல் பேரழகும்/
அன்ன நடையழகும் அசத்துதடி என்மனசை/
பண்ணாலே பாட்டிசைத்து பம்பரமாய் நாற்றுநட/
காதல் பெருகுதடி காளைமனம் ஏங்குதடி/

வண்ணக் கிளியழகே
வடிவான பெண்ணழகே/
வளையலும் சினுங்குதே
வருவாயோ எனதருகே/
தருவாயா உன்மனசை
தாங்குவேண்டி காலமெல்லாம்/
முருகன் முறைப்படியே
அருகில்வந்து அமரேண்டி/

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan