இராசையா கௌரிபாலா

பணி
——-
பணிவு வேண்டும் நல்லறிவு பெற்றிடவே
அணிதல் வேண்டும் கலனாய் மனத்திலே
துணிந்தே ஆணவத்தைக் களைந்திட வேண்டும்
பிணியறுக்கும் பண்புடன் பொறுமை கொண்டிடவே

சந்தர்ப்பம் வேறுவகை சரித்திரம் சொல்லும்
வெந்து போயின் வீராப்பே சிறப்பு
நொந்திடா இடத்தில் பணிதல் மேன்மை
முந்தியெம் அவைதனில் முன்னேற்பார் பணிவு

அடங்குதல் மறுத்தல் வெவ்வேறு கருத்தெனில்
விடம்கொண்ட இடத்தில் பணிதல் வேண்டாமே
முடமில்லை எனவாய்க் கொள்மனமே பணிந்திட
வடம்பிடித்து வால்போல் தொங்குதல்
பணிவல்ல.

இராசையா கௌரிபாலா

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading