26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
ஒளவை
மூன்றாவது கண்
*********************
மண்ணில் எங்கும்
மானிட அவலம்
எண்ணிப் பார்த்தால்
எங்கும் வன்மம்
பண்பிலா செயலைப்
பார்த்து நோகக்
கண்கள் இரண்டு
காணாது இறைவா
மனிதர் கூட்டம்
மிருகம் போல
புனிதம் அற்றுப்
பழிகள் தொடருதே
புரியும் போரில்
பகையை வெல்ல
எரிக்கும் கண்ணாய்
ஒன்று வேண்டும்
பொய்மை நோக்கம்
புரிந்ததும் அழித்திட
மெய்யாய் ஒருகண்
முகத்தில் இருந்தால்
ஆயுதம் எதுவும்
அணுவில் வேண்டாம்
பாயும் பார்வையே
பகையை எரிக்கும்
முதலாம் கடவுள்
மூன்று கண்ணை
அதனால் தானே
அமைத்துக் கொண்டார்
இதனைச் சாட்டாய்
எடுத்துக் காட்டி
மிதமாய் ஒன்று
எமக்கும் கேட்போம்.
ஒளவை.

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...