Selvi Nithianandan

இப்படியுமா
விந்தை உலகிலே
வியப்பான செய்தியும்
சிந்தை முழுதும்
சிதையும் மனிதமும்

விரைந்தோடும் விடியலும்
வரிசையிலே காத்திருப்பு
விலையில்லா உயிரும்
பலியாகும் நிலையில்

விநியோகப் பொருளும்
விலையேற்றம் கண்டு
வியாபாரக் கடையும்
விற்க்குதே உயர்வாய்

அத்திவசியப் பொருளும்
இரட்டிப்பு உயர்வு
அன்றாடப் பிழைப்பு
அச்சத்தால் இருப்பு

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading