Selvi Nithianandan

இப்படியுமா
விந்தை உலகிலே
வியப்பான செய்தியும்
சிந்தை முழுதும்
சிதையும் மனிதமும்

விரைந்தோடும் விடியலும்
வரிசையிலே காத்திருப்பு
விலையில்லா உயிரும்
பலியாகும் நிலையில்

விநியோகப் பொருளும்
விலையேற்றம் கண்டு
வியாபாரக் கடையும்
விற்க்குதே உயர்வாய்

அத்திவசியப் பொருளும்
இரட்டிப்பு உயர்வு
அன்றாடப் பிழைப்பு
அச்சத்தால் இருப்பு

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading