கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

இரா விஜயகௌரி

மௌனம் பெரு மரணம்

ஓடி ஓடிக் கொண்டிருக்கும் உலகு
நிழல் தேடி தேடிச் சென்றிருக்கும் உறவு
உயிரப்பின் வருடல்களால் உருவாகும் கணங்கள்
அவை உயிர்த் துடிப்பை இழப்பின்அங்கு மரணம்

நீத்தார் மட்டுமல்ல இறந்தோர்
செயலிழந்த மாந்தர்களும்ஜடங்கள்
செறிவிழந்த வாழ்வுமது. சருகே
இழைவெழுத மறந்தோரும் பிணம்தான்

கணங்களுடன் போராடும் உலகில்
தனித்திருந்து வாழ்கணங்கள் கொடுமை
இயல்பிலிதை உணர்பவர்கள் சிலரே
உரைப்பதற்கு மொழியிங்கே கதறும்

மௌனமிது மூச்சடைத்து உழல
உயிருடலும். ஜடமாகி. முடங்கும்
கனக்கின்ற நொடிகளெலாம். கலங்கும்
உயிர்ப்பெழுதா நொடிகள் தமை உடைப்போம்

நம்கைகள்தாம் எமக்கு பலமே
நம்கால்கள் நிலைத்தெழுத. உழைப்போம்
மரணத்தால் மரணிக்கா வாழ்வை
மௌனத்தை. உடைத்தெறிந்து படைப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading