மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

இரா விஜயகௌரி

மௌனம் பெரு மரணம்

ஓடி ஓடிக் கொண்டிருக்கும் உலகு
நிழல் தேடி தேடிச் சென்றிருக்கும் உறவு
உயிரப்பின் வருடல்களால் உருவாகும் கணங்கள்
அவை உயிர்த் துடிப்பை இழப்பின்அங்கு மரணம்

நீத்தார் மட்டுமல்ல இறந்தோர்
செயலிழந்த மாந்தர்களும்ஜடங்கள்
செறிவிழந்த வாழ்வுமது. சருகே
இழைவெழுத மறந்தோரும் பிணம்தான்

கணங்களுடன் போராடும் உலகில்
தனித்திருந்து வாழ்கணங்கள் கொடுமை
இயல்பிலிதை உணர்பவர்கள் சிலரே
உரைப்பதற்கு மொழியிங்கே கதறும்

மௌனமிது மூச்சடைத்து உழல
உயிருடலும். ஜடமாகி. முடங்கும்
கனக்கின்ற நொடிகளெலாம். கலங்கும்
உயிர்ப்பெழுதா நொடிகள் தமை உடைப்போம்

நம்கைகள்தாம் எமக்கு பலமே
நம்கால்கள் நிலைத்தெழுத. உழைப்போம்
மரணத்தால் மரணிக்கா வாழ்வை
மௌனத்தை. உடைத்தெறிந்து படைப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading