மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

துளிநீர்

துளித்துளியாய் பெய்யும் மழை
தொடராய் பெய்யும் விடாதா மழை.
கடளினுள் கலக்கும் மழைத்துளி
கன மழையாவதும் துளிநீரே.

ஒழுகும் நீரை ஓடவிட்டு
கழுவும் வரை திறந்த நீரை,
கடகட வென ஓடினாலும்
நிறுத்த தோன்றா மனித இனம்.

நீரின் பெறுமதி தெரியவில்லை
நீரின்றி போனால் வாழ்வுமில்லை.
காரின்றி இருந்தால் மழையுமில்லை
காய்ந்து விட்ட நிலத்திற்கு ஒரு துளிநீர் இல்லை.

நீருக்கும் உண்டு பலவகைக் குணங்கள்
நீரும் மூன்றுமுறை பிழை பொறுக்கும்.
வேருக்கும் கொடுத்த துளிநீர் கூட
விருட்சமாக்கும் ஆலமரத்தை போல.

துளீநீர் என்று வீணாக்காது
துளி நீர் சேகரித்துக் குடத்தில்
தளிர்விடும் குருத்தை காப்பதுபோல்.
வளம் பெற சுய வாழ்வுக்கு
துளிர் நீர் அவசியமென்று உணர்க.

கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading