Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-05.05.2022
கவிதை இலக்கம்-1505
மே தினத்தின் மகிமை
——————————–
உலகத் தொழிலாளர்களே
ஒன்று சேருங்கள்
இழப்பதற்கு ஒன்றுமில்லை
பெறுவதற்கே ஓர் உலகம் இருக்கிறதே
மேதினத்தின் மகிமையே கூவி அழைக்கிறது
ஒவ்வொரு மானிடனத் தொழிலாளர்களும்
கடும் உழைப்பாளிகள் போற்றுதற்குரியவர்களே
அல்லும் பகலும் அயரா உழைப்பில்
உடலை இயந்திரமாக்கி
மனதினைக் கல்லாக்கி
வியர்வைத் துளிகளை சிவப்பு நிறமாக்கி
மாடாய் உலக மக்களிற்காக குடும்பத்திற்காக
செய்யும் தொழிலே தெய்வமென
மகிழ்ச்சியால் மனம் வயிறு குளிர வைத்து
தொழிலாளரின் உழை கரங்களே உயர்வானது
போற்றி புகழ்ந்து மகிமை படுத்துவோம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading