Selvi Nithianandan

தேனீ (517)
ஆறுகால் கொண்டதொரு பூச்சீனம்
அவனியிலே பலவகையைக் கொண்டதும்
ஏழுவகை தேனீங்கள் பிரபலமானதும்
எப்போதுமே கூட்டமாய் வாழுமாம்

அறுகோண அறைகொண்ட கூடுகட்டி
அவற்றின் உடலில் வெளியேற்றும் மெழுகாலே
தேனை சேகரித்து வாழும் திறமையாம்
ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை பயணிக்கும்
திறனைக் கொண்டதாம்

இராணித்தேனீ வேலைக்காரத் தேனீ மலைத்தேனீ
கொம்புத்தேனீ அடுக்குத்தேனீ கொசுத்தேனீ
மேற்கு கிழக்குலகத் தேனீ இப்படி பலவகையாம்
மேதினியிலே பலருக்கு இலாபமாம்

நடனம்மூலம் கருத்து பரிமாற்றம் செய்யும்
நிர்க்கதியாய் வெளியேற்றப்பட்டு இறக்கும்
சோம்பேறி என்றும் பெயரும் உண்டு
சுற்றுச் சூழலுக்கு பெரிதும் உதவுமே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading