” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan

தேனீ (517)
ஆறுகால் கொண்டதொரு பூச்சீனம்
அவனியிலே பலவகையைக் கொண்டதும்
ஏழுவகை தேனீங்கள் பிரபலமானதும்
எப்போதுமே கூட்டமாய் வாழுமாம்

அறுகோண அறைகொண்ட கூடுகட்டி
அவற்றின் உடலில் வெளியேற்றும் மெழுகாலே
தேனை சேகரித்து வாழும் திறமையாம்
ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை பயணிக்கும்
திறனைக் கொண்டதாம்

இராணித்தேனீ வேலைக்காரத் தேனீ மலைத்தேனீ
கொம்புத்தேனீ அடுக்குத்தேனீ கொசுத்தேனீ
மேற்கு கிழக்குலகத் தேனீ இப்படி பலவகையாம்
மேதினியிலே பலருக்கு இலாபமாம்

நடனம்மூலம் கருத்து பரிமாற்றம் செய்யும்
நிர்க்கதியாய் வெளியேற்றப்பட்டு இறக்கும்
சோம்பேறி என்றும் பெயரும் உண்டு
சுற்றுச் சூழலுக்கு பெரிதும் உதவுமே

Nada Mohan
Author: Nada Mohan