கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு
பாமுகம்

பாமுக பந்தலின்
தோட்டம்
பல்வகை முகங்களின் தோற்றம்
பூமுகம் மலர்ந்து
பூக்கும்
புன்னகை இதயங்கள் மணக்கும்
நற்றமிழ் நித்தமும் பொழியும்
நன்செய் முளைப்பயிர் விளையும்
வெற்றி வாகை
சூடி
வெள்ளி வாழ்த்துகள் கோடி
முத்துகள் விலையும் கல்விக்கூடம்
முத்தமிழ் தவழும் கலைக்கூடம்
வித்தகர் பலரை விதைத்தநிலம் விரும்பிய திறனை வளர்த்ததளம்
வாழ்க லண்டன் வானொலியே
வீசுக பாரினில் பட்டொலியே
வாழ்க என்றே வாழ்த்துகிறேன் வந்தனம் தந்தே வணங்குகிறேன்

நன்றி வணக்கம்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

வெள்ளிவிழா கண்ட
வெள்ளை உள்ளங்ளான
அதிபர் அவர்களுக்கும்
வாணிசகோதரி அவர்களுக்கும்
கவிஞர் சகோதரர் பாவை அண்ணா அவர்களுக்கும் பாமுக
உறவுகள் அனைவுக்கும்
வாழ்த்துகள் உறவுகளே👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading