இராவிஜயகௌரி

அறியாமை. வாழ்வின் பெருந்துன்பம்

நொடிகள் தோறும் மாறி. எழும்
வெடித்துக் கிளம்பும் மாறுதல்கள்
அதற்குள் அலறும் பலர் மனங்கள்
விடியல் எங்கே ஒளி பெறுமோ

கனவின் பிடிக்குள் வாழ்வமைத்து
நொடிந்து நொடிந்து முடங்கி விட்டால்
பலத்தை இழந்த கைகளுக்கு
நலத்தைக் கொடுக்க இறைவனில்லை

எழுவேன் என்றே முரசறைந்து
பழிக்கும் சொல்தனை இடித்துரைத்து
தனி வழி சமைத்து உறுதி கொடு
உயரும் வழிகளில்உன்பாதை

அறியாமை என்பது பல வழியில்
அனைத்தும் தெளியின் நாணிடுவோம்
வாய்ப்பந்தல் போடுதல் செயல்ல்ல
இன்றே கருவினுக்குயிர் கொடுப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading