மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

மீளெழும் காலம்….
வரட்சி நீக்கிடும் மழை நீரே

பாறை பிளந்த விவசாயி
பாரின் பசி போக்கிய உபகாரி
நானில வாழ்வில் மழை நீரே
நாற்திசை வளத்தின் செழிப்போடு
நற்பயிர் வளரும் வனப்போடு
மீளெழும் நாட்டின் பெரும்பேறு

தாயக வாழ்வின் தளர்ச்சியில்
தள்ளாடும் உறவுகள் மீட்சியில்
அமைதியின் உறக்கம் திண்டாடும்
அவரவர் மனதில் போராட்டம்
அகலுமா அவலத்தின் பிடிமானம்
மீளுமா மறுபடி மிடுக்கோடு

எத்தனை அளவீடு எமக்குள்ளே
ஏற்றத்தின் இறக்கத்தின் கணக்கிலே
பார்த்தவை விலகும் பரஸ்பரமாய்
பாதைகள் திறக்கும் தினம்தினமாய்

செதுக்கிடும் வயலில் செழிப்பு விதை
செம்மைக்கு உரமாய் மொழியை வளர்
செழிக்கும் உறவே தனித்தோப்பு
சிறக்கும் வாழ்வின் பெரும்காப்பு
நாளைய தலைமுறை நல்நாற்று
மீளெழும் வாழ்வே முன்னேற்றம்
மிளிர்ந்திட உழைப்பதே நம்நாற்று.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading