ரஜனி அன்ரன்

“ உச்சம் தொட்ட மக்கள்தொகை “கவி….ரஜனி அன்ரன் (B.A) 17.11.2022

உச்சம் தொட்ட மக்கள்தொகை
அச்சம் கொள்ள வைக்குதே உலகை
எண்ணூறு கோடியினை
எட்டித்தான் விட்டது
இதில் சீனாவும் இந்தியாவும்
முந்தித்தான் கொண்டது
பூமிப்பந்து தாங்குமா
பூதாகரம் தான் வெடிக்குமா !

மருத்துவம் தொழில்நுட்பம்
சுகாதாரம் விழிப்புணர்வு
ஆரோக்கிய வாழ்வு ஆயுட்கால நீடிப்பால்
மின்னல் வேகத்தில் குடித்தொகைப் பெருக்கம்
மனித அபிவிருத்தியில் மைல்கல்லாகி
உச்சம் தொட்டதே எண்ணூறு கோடியினை !

பெருகிவரும் மக்கள் பெருக்கம்
அருகி விடுமே நீர்நிலவள பற்றாக்குறை
உருகி விடுமே பனிப்பாறைகளும்
காடுகளை வளர்த்து களனிகளைப் பேணி
நெகிழியை விடுத்து நீரினைச் சேமித்தால்
நிலமும் செழிக்கும் நிம்மதியும் கிடைக்கும்
எதிர்கால சந்ததிக்கும் அனுகூலமாகுமே !

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading