மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ரஜனி அன்ரன்

“ உச்சம் தொட்ட மக்கள்தொகை “கவி….ரஜனி அன்ரன் (B.A) 17.11.2022

உச்சம் தொட்ட மக்கள்தொகை
அச்சம் கொள்ள வைக்குதே உலகை
எண்ணூறு கோடியினை
எட்டித்தான் விட்டது
இதில் சீனாவும் இந்தியாவும்
முந்தித்தான் கொண்டது
பூமிப்பந்து தாங்குமா
பூதாகரம் தான் வெடிக்குமா !

மருத்துவம் தொழில்நுட்பம்
சுகாதாரம் விழிப்புணர்வு
ஆரோக்கிய வாழ்வு ஆயுட்கால நீடிப்பால்
மின்னல் வேகத்தில் குடித்தொகைப் பெருக்கம்
மனித அபிவிருத்தியில் மைல்கல்லாகி
உச்சம் தொட்டதே எண்ணூறு கோடியினை !

பெருகிவரும் மக்கள் பெருக்கம்
அருகி விடுமே நீர்நிலவள பற்றாக்குறை
உருகி விடுமே பனிப்பாறைகளும்
காடுகளை வளர்த்து களனிகளைப் பேணி
நெகிழியை விடுத்து நீரினைச் சேமித்தால்
நிலமும் செழிக்கும் நிம்மதியும் கிடைக்கும்
எதிர்கால சந்ததிக்கும் அனுகூலமாகுமே !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading