மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

24.11.22
ஆக்கம்- 252
தலை சாய்ப்போம்
மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய்

தம்மை விடத் தாய் நாட்டை நேசித்து
பசி,பட்டினி,துயரம் பாராது- உயர் நற்
பண்போடு நாளும் பொழுதும்- உடல்
வருத்தி காட்டிலும் மேட்டிலும் அலைந்து
இள வயதிலே தமிழீழ இலட்சித்துக்காய்ப்
போராடி மர்ணித்த மாவீரரே

நெஞ்சிலே வீரம் உறுதி பூண்டு
நஞ்சைக் கழுத்தில் தொங்கவிட்டு
எம் மண் விடுதலைக்காய் உழைத்த
வீர மறவர்களே உன்னதத் தியாகிகளே

சாகா வரம் பெற்ற மண்ணின் மைந்தரே
எம் சோகம் தீர்த்து எம் பாகம் பெற்றிட
வீறு நடை கொண்டு வந்திடுவீரே

கார்த்திகை மலரும் காந்தள் மலராய்
பூத்திடும் போர்வீரரே எழுந்திடுவீர்
இலங்கைத் தீவை காத்திடுவீர்
மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய்
தலை சாய்ப்போமே.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading