கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

இரா விஜயகௌரி

தலை சாய்ப்போம்
மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய்

வேரோடு விழுதாக
விடுதலையின் வேள்வி தன்னில்
ஆகுதியாய் தமை ஈந்த
அரணான எம் மைந்தர்

சீராளும் பூமியிலே
சிரம் தந்து தமை ஈந்து
காடாளும் நிலை கண்டு
கன்ன்றெரியும் தீ சுமந்தோர்

தாய் மண்ணே தமக்கான
சேய் தாங்கும் பெரும் பணியாய்
களத்தினிலே பலம் கொண்டு
சமர்கண்டு தமை. ஈந்தோர்

தலை சாய்த்து வணங்குகின்றோம்
உம் விழுதுகளை நாம் சுமந்து
வழிகண்டு விழி மலர
வாழ்வமைப்பதுவும். நம் கடமை

வார்த்தைகளால் வருடாமல்
எம் செயல்கொண்டு துயர் களைந்து
மனிதம் காத்தோரை மாவீரக் கடவுளரை
எம் பெரும் பணி கொண்டு வணங்கி நிற்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading