“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

இரா விஜயகௌரி

தலை சாய்ப்போம்
மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய்

வேரோடு விழுதாக
விடுதலையின் வேள்வி தன்னில்
ஆகுதியாய் தமை ஈந்த
அரணான எம் மைந்தர்

சீராளும் பூமியிலே
சிரம் தந்து தமை ஈந்து
காடாளும் நிலை கண்டு
கன்ன்றெரியும் தீ சுமந்தோர்

தாய் மண்ணே தமக்கான
சேய் தாங்கும் பெரும் பணியாய்
களத்தினிலே பலம் கொண்டு
சமர்கண்டு தமை. ஈந்தோர்

தலை சாய்த்து வணங்குகின்றோம்
உம் விழுதுகளை நாம் சுமந்து
வழிகண்டு விழி மலர
வாழ்வமைப்பதுவும். நம் கடமை

வார்த்தைகளால் வருடாமல்
எம் செயல்கொண்டு துயர் களைந்து
மனிதம் காத்தோரை மாவீரக் கடவுளரை
எம் பெரும் பணி கொண்டு வணங்கி நிற்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading