பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

புனிதா கரன் கவிதை 03 UK

தலைசாய்ப்போம் மனிதம்
நிமிர வாழ்ந்தவர்க்காய்//
ஒடுக்கப்பட்ட பேச்சுரிமை
தரப்படுத்தப்பட்ட கல்விமுறை//
பல வழிகளில்
பறிக்கப்பட்ட உரிமைகள்//
அறவழிப் போராட்டம்
அத்துமீறிப் போகவே//
ஆயுதம் ஏந்தியே
அன்றாடம் போராடினர்//
காடுமேடு பொருட்டல்ல
காலநிலை பார்க்கவில்லை//
தன்னினத்தின் மீது
கொண்ட விருப்பினாலே//
தன்னைப் பற்றிய
சிந்தனை இல்லை//
ஊணுறக்கம் இன்றி
உறவுகளை மறந்து//
உரிமைகளை மீட்டிடவே
விதையாகி போனார்களே//
வீசும் காற்றும்
வேதனையைச் சொல்லுதே//
குருதி வடிந்தமண்ணோ
குமுறி வெடிக்குதே//
இன்னலைப் பொறுத்திடா
இயற்கையும் சீற்றம்கொள்ளுதே//
தன்னலம் கருதா
தமிழ் வீர்ர்கள்//
எல்லோர் நினைவிலும்
என்றும் வாழ்கின்றனர்//
ஏற்றிய தீபத்தில்
எழிலாய் சுடர்விடும்//
மாண்புடன் மனிதநேயம்
மாசற்று வாழ்கவே//

புனிதா கரன்
கவிதை 03
UK

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading