புனிதா கரன் கவிதை 03 UK

தலைசாய்ப்போம் மனிதம்
நிமிர வாழ்ந்தவர்க்காய்//
ஒடுக்கப்பட்ட பேச்சுரிமை
தரப்படுத்தப்பட்ட கல்விமுறை//
பல வழிகளில்
பறிக்கப்பட்ட உரிமைகள்//
அறவழிப் போராட்டம்
அத்துமீறிப் போகவே//
ஆயுதம் ஏந்தியே
அன்றாடம் போராடினர்//
காடுமேடு பொருட்டல்ல
காலநிலை பார்க்கவில்லை//
தன்னினத்தின் மீது
கொண்ட விருப்பினாலே//
தன்னைப் பற்றிய
சிந்தனை இல்லை//
ஊணுறக்கம் இன்றி
உறவுகளை மறந்து//
உரிமைகளை மீட்டிடவே
விதையாகி போனார்களே//
வீசும் காற்றும்
வேதனையைச் சொல்லுதே//
குருதி வடிந்தமண்ணோ
குமுறி வெடிக்குதே//
இன்னலைப் பொறுத்திடா
இயற்கையும் சீற்றம்கொள்ளுதே//
தன்னலம் கருதா
தமிழ் வீர்ர்கள்//
எல்லோர் நினைவிலும்
என்றும் வாழ்கின்றனர்//
ஏற்றிய தீபத்தில்
எழிலாய் சுடர்விடும்//
மாண்புடன் மனிதநேயம்
மாசற்று வாழ்கவே//

புனிதா கரன்
கவிதை 03
UK

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading