திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜேர்மனியிலிருந்து

07.12.22
ஆக்கம்254
ஞாபக நினைவுகள்

நடந்து வந்த பாதையில்
நாம் கடந்து போன பதிவுகள்
மனதில் கவலைகளாகப்
பிரசுரிக்கின்றது
இதன் பிரதியே கனவெனும்
குழந்தையைத் தினமும் இரவில்
பிரசவிக்கின்றது

காவிச் சென்ற சடங்குகள்
தேம்பித் தேம்பிக் கொதிக்குதே
மேவி நின்ற குடும்ப உறவுகள்
கூட்டுக் குடும்பமாய்த் திரண்டதே
உலாவிய முற்றத்தில் மார்கழி
இருட்டில் ஒன்றாயமர்ந்து
குப்பி விளக்கில் நிலாச்சோறு
உண்டது சுவையூறுதே

மார்கழியில் கடும் மழையில் நனைந்து
காகம் போல் நனையுதுகள் என்று
அம்மாவிடம் செல்லத்திட்டு வாங்கியதும்
ஞாபக நினைவாய் வந்து வந்து போகுதே.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading