28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
ராணி சம்பந்தர் ஜேர்மனியிலிருந்து
07.12.22
ஆக்கம்254
ஞாபக நினைவுகள்
நடந்து வந்த பாதையில்
நாம் கடந்து போன பதிவுகள்
மனதில் கவலைகளாகப்
பிரசுரிக்கின்றது
இதன் பிரதியே கனவெனும்
குழந்தையைத் தினமும் இரவில்
பிரசவிக்கின்றது
காவிச் சென்ற சடங்குகள்
தேம்பித் தேம்பிக் கொதிக்குதே
மேவி நின்ற குடும்ப உறவுகள்
கூட்டுக் குடும்பமாய்த் திரண்டதே
உலாவிய முற்றத்தில் மார்கழி
இருட்டில் ஒன்றாயமர்ந்து
குப்பி விளக்கில் நிலாச்சோறு
உண்டது சுவையூறுதே
மார்கழியில் கடும் மழையில் நனைந்து
காகம் போல் நனையுதுகள் என்று
அம்மாவிடம் செல்லத்திட்டு வாங்கியதும்
ஞாபக நினைவாய் வந்து வந்து போகுதே.
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...