24
Jun
வேண்டாமே இப்படியொரு எரிக்கின்ற கோடை
தீப்பற்றி எரியுது பூலோக மேடை
கருணையில்லா கதிரவன்...
24
Jun
அவர் ஒரு வாழ்க்கை தத்துவம்
ஆயிரம் நட்சத்திரங்கள் நடுவில் அப்பா ஒரு நிலவு
ஆயிரம் உறவுகளுக்கு மத்தியில் தந்தையை...
24
Jun
மீண்டாலும் துயரமே
செல்வி நித்தியானந்தன் மீண்டாலும் துயரமே
பிறப்பு இறப்பு இறைவனின் நியதி
பிரிவு வந்தாலே அதுவும்...
அல்வாய் பேரின்பநாதன்
தை பொங்கல் (வாழ்க்கை) வாழ்த்துகள்
இயற்கை போற்றும் இனிய பொங்கல்
இயற்கை போற்றும்
இனிய பொங்கல்
எங்கள் பண்பாட்டின்
வாழ்வியல் பொங்கல்
எழுகதிர் சூரியனின்
உயிர்ப்படைப்பில்
பயிர் வளர்த்து உயிர்காக்கும்
உழவனவன்
விதை விதைத்து
கதிர் அறுப்பான்
வியர்வைத் துளிகளை
நெல் மணிகளாய்
சர்க்கரையில் பொங்கலிட்டு
வாழையிலைதனிலே படையலிட்டு
கதிரவனை வணங்கி நிற்பான்
நன்றியுள்ள தமிழனாய்
பொங்கிவரும் மகிழ்ச்சிதனை
பகிர்ந்திடுவோம் யாவர்க்கும்
வணங்கி வாழ்த்தி நிற்போம்
நன்றியுடன் உழவனிற்கு
வழிகாட்டும் தைமகளை வரவேற்று
நாமும் விதைத்திடுவோம்
நல்ல எண்ணங்களை உள்ளங்களில்
பெற்றுடுவோம் நற்பண்புகளை அறுவடையாய்
வாழ்க்கைப் பொங்கலுக்கு
உணர்வும் உழவும் கலந்து பொங்கிடும்
இயற்கை போற்றும் இனிய பொங்கல்
தைத்திருநாள் வாழ்த்துகள்
கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...