மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

அவர் ஒரு வாழ்க்கை தத்துவம்

ஆயிரம் நட்சத்திரங்கள் நடுவில் அப்பா ஒரு நிலவு
ஆயிரம் உறவுகளுக்கு மத்தியில் தந்தையை போலில்லை ஓர் உறவு
அவர் பேசிய அந்த சொட்டு வார்த்தைகளே என் வாழ்க்கையை கட்டியது
பொறுப்பு அர்ப்பணிப்பு தியாகம் என்பவற்றிற்கு அவரே உயிரூட்டியது

தாயின் அன்பில் நனைந்திருந்தாலும் தகப்பனின் அன்புக்குள் மூழ்கினோம்
பிள்ளைகளின் கனவே தன் கனவென நினைக்கும் பிறப்பு
தான் காணாதவற்றையெல்லாம் தன் குழந்தைகள் காணவேண்டியே தவிப்பு
கொடிய காலம் அந்த உழைப்பின் கோலத்தை சரித்திருந்தாலும்
இன்று நான் காணும் வெற்றிகளிலெல்லாம் அவர் வியர்வையும் கலந்திருக்கின்றது.
ஜெயம்
25-06-2026

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading