திருமதி.அபிராமி கவிதாசன்.

17.01.2022

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -206
தலைப்பு !
“தைமகளே”

தைமகளே வருகவே
தரணித்தாய் மகிழவே
வைமகளே வாழ்வையைம்
வளர்பிறையாய் வளரவே

உலதாய் மடியினிலே
உலாவரும் குழந்தைகளின்
பலவண்ண கனவுகளும்
புலர்ந்திட வருகவே

வறுமையும் பஞ்சமும்
வண்ணமாய் மாறவும்
சிறுமையின் எண்ணமும்
சிகரமாய் உயரவே

இறந்ததெல்லாம் போதுமே
இழப்பதற்கு ஒன்றுமில்லை
பிறந்துநீயும் வந்திடுவாய்
பிரபஞ்சம் காத்திடவே

நோயும் நொடியுமாய்
நொந்த உள்ளங்களும்
வாயுவின் பிடியினிலே
வதம்செய்த பிணிஒழிக்க

தைமகளே பிறந்துவா
தைரியத்தைக்்கொண்டுவா
பூமகளே புன்னகையும்
பூரிப்பையும் கொடுக்கவா !

நன்றிகள் 🙏🙏🙏
கவிப்பார்வை .. தட்டிக்
கொடுப்புக்கும் …என்
மனமார்ந்த நன்றிகள் பாவை அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading